Description |
சிக்கல்கள் நிறைந்ததாகிவிட்ட பொது மக்கள் பரப்பிற்குள் நீதி மற்றும் சமத்துவத்துக்கான விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்திய அரசியல் போராளியும் அறிவுஜீவியும் சிந்தனையாளருமான எட்வர்ட் ஸெய்த்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளையும் நேர்காணல்களையும் கொண்ட தொகுப்பு இது. ஸெய்த்தை, அவரது சிந்தனைகளை, எளிமையும் தீவிரமும் கொண்ட விதத்தில் அறிமுகம் செய்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஸெய்த்தின் சிந்தனைகளைப் பிரதிநிதித்துவம் செய்கிற படைப்புகள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றோடு அவரது மாணவரும் சக சிந்தயை£ளருமான கௌரி விஸ்வநாதன் எழுதியுள்ள அஞ்சலியும் இடம்பெற்றுள்ளது. |