Description |
சமகால வாழ்வின் சிறு பொழுதுகளைப் பேசுபவை செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள். மிகையோ ஆர்ப்பாட்டமோ முழக்கமோ இல்லாமல் அந்தப் பொழுதுகளின் நிகழ்வுகள் கவிதைகளாக ஆக்கம் பெறுகின்றன. மொழியிலும் அணுகு முறையிலும் எளிமையானவை இந்தக் கவிதைகள். ஆனால் நவீன மனிதனின் எல்லா சிக்கல்களும் எல்லாத் தடுமாற்றங்களும் இந்த எளிமைக்குள் குவிந்திருக்கின்றன. செல்வராஜ் ஜெகதீசனின் நான்காவது தொகுப்பு இது. |