Description |
தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த சுந்தர ராமசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சிறந்த கல்வியாளருமான வெ. வசந்திதேவியுடன் கல்வித்துறை சார்ந்த பல்வேறு பிரச்சினை குறித்து நிகழ்த்திய நீண்ட உரையாடலின் நூல் வடிவம். ‘கல்வி மனித நேயத்தை வளர்க்க வேண்டும்; சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்’ என்னும் குறிக்கோள்களை முன்வைத்து பல்வேறு தளங்களை நோக்கி விரிவடைகிறது இந்த உரையாடல். |