Description |
எதைச் செய்தாலும் அதை உணர்ந்து செய்தல், புரிந்துகொள்ளுதல் என்ற விருப்பத்தோடு செய்தல், எல்லாச் செயல்களையுமே அகத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற நாட்டத்தோடு செய்தல், நாடிச் செய்தல், அதுவே உடலுக்கும் இயற்கைக்குமான உறவைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த மிக மிக எளிமையான வழி. இதுவே நாடி கற்றுக்கொள்ளும் வழி. வாதம் பித்தம் கபம் எனும் பாடமும் இந்த மாதிரியான நாடல்களின் வழியாகவும் உணர்தல்களின் வழியாகவும் தொகுக்கப்பட்ட பாடமே. இது காரண காரியத்தின் அடிப்படையிலான படம் அல்ல. ஆனால், இந்தப் பாடம் சொல்லும் செய்திகளை நீங்கள் புரிந்து கொண்டால் உங்களுக்குக் காரண காரியங்கள் மிக எளிதாகப் பிடிபடும். இது மூலம். இதிலிருந்து காரண காரியங்களைப் புரிந்து கொள்ளலாம். காரண காரியங்களை வைத்து மூலத்தை அறிந்து கொள்ளவே முடியாது. |