Description |
ஜோடனைகளைக் கழற்றி எறிந்தாடும் உக்கிரனின் கையில் நெருப்பாக, படிப்பவர்கள் மீது வாதைகளை ஏவும் மந்திர மொழியாக, வெளிப்படும் ராஜ்குமாரின் கவிதைகள், பச்சை மிளகாய் அரிந்து போட்ட கருவாட்டுக் குழம்பாகவும் ருசிக்கின்றன. இரவல் பெறாத சொற்களால் நெய்யப்பட்ட இக்கவிதைகள் இதுவரை புறக்கணிக்கப்பட்ட, அவ மதிக்கப்பட்ட மக்களின் உலகை ஒரு அகழ்வாராய்ச்சியாளனின் பொறுப்போடும் நேர்மையோடும் முன்வைக்கின்றன. ராஜ்குமாரின் வெளிவந்த மற்றும் வெளிவராத படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு தலித் கவிதைகளுக்கு மட்டுமன்றி தலித் பண்பாட்டுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. |