Description |
இலக்கியப் பரிச்சயமோ, முக அறிமுகமோ இல்லாத - கோவை மத்தியச் சிறையில் தடா கைதியாக இருந்த - ஏழுமலை என்பவருக்கு இரண்டாண்டுகளுக்கும் மேலாகச் சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல். இந்தக் கடித வரிகளில் வெளிப்படுவது சுந்தர ராமசாமியின் இலக்கிய ஆளுமை மட்டுமல்ல, வாழ்க்கை குறித்த நுட்பமான பார்வை மட்டுமல்ல, சக மனிதனின் மீது அவர் எப்போதும் கொண்டிருந்த அக்கறையும் நேசமும்கூடத்தான். அவ்வகையில், பெரும்துக்கம் கவிந்திருந்த ஒரு மனித ஜீவனுக்கு இதம் தந்த இந்தக் கடித உரையாடல்கள் நம் எல்லோருக்குமானவையே. |