Description |
தன்னைச் சுற்றியுள்ள, தான் வாழ்ந்துகொண்டிருக்கின்ற பிரபஞ்சத்தினைக் கேள்விக்குறியாக்குவதுடன் ஒவ்வொரு அம்சங்களுடனும் தொடர்புகொள்ளும் தன்மை இன்னொரு வகையில் முக்கியமான படிமுறைத்தன்மையாகும். இந்தத் தொடர்பும் அனுபவமும் சிறந்த கவிதைகளைப் பிரசவிக்க சோலைக்கிளிக்கு வாய்ப்பளிக்கின்றது. வீட்டின் பல்லிகளையும், ஆட்டுக்குட்டியையும், நிலவையும், வெள்ளி களையும், நீரையும், சூரியனின் நாக்கையும் தொடர்புபடுத்தவும் இந்தப் பிரபஞ்சத்தின் இதயத்தையும் ஒரு தரம் இரண்டு தரம் தொட்டுப்பார்க்கவும் அவரால் முடிகின்றது. பின்னுரையில் எச்.எம். பாறுக் |