Description |
இரண்டாவது ஈழப்போரின்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வரும் ஈழத்துக் கவிஞர் திருமாவளவனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இதிலுள்ள கவிதைகள், ஊரும் போரும் மனித அழிவுகளும் வெறும் நினைவுகளாக மங்கிப்போய்க்கொண்டிருக்கும் புலம்பெயர் வாழ்வின் இன்றைய யதார்த்தத்தைத் துயரம் கவிந்த மனத்துடன் பதிவு செய்கின்றன. கவிதையமைப்பிலும் மொழி நடையிலும் அழகியல் கூறுகளிலும் வாழ்க்கை குறித்தான பார்வைக் கோணத்திலும் திருமாவளவன் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருவதை இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் தெளிவாக உணர்த்துகின்றன. |