Description |
தமிழகத்தில் இன்று நதிகளின் நிலை என்ன? மக்கள்தொகை பெருக்கம், பெருகிவரும் உணவுத்தேவை, நகர்மயமாக்கம், தொழில்மயமாக்கம் முதலானவற்றால் நீர்ப்பயனுரிமையார்களிடையே நிலவும் கடும் போட்டி ஒருபுறம். நீர்வளங்கள் எல்லாம் பயனுரிமையாளர்களின் சுயநலத்தினால் மாசுபட்டு அழிந்துவரும் அபாயம் மறுபுறம் ஏன் இந்த நெருக்கடி? இன்னெருக்கடிக்கு யார் பொறுப்பேற்பது? தீர்வு என்ன? சமூக விஞ்ஞானிகளும் நீர் மேலாண்மை வல்லுனர்களும் மட்டுமல்லாமல் நுகர்வோரும் பயனுரிமையாளர்களும் இணைந்து இக்கேள்விகளுக்கு விடைகாண முயல்கின்றனர் இந்நூலில். |