Description |
டிசம்பர் 18, 2010 அன்று துனிஷியாவில் அரசுக்கு எதிரான மக்கள் புரட்சி ஆரம்பித்தது. அது மெல்ல மெல்ல மத்தியக் கிழக்கு நாடுகள் அனைத்துக்கும் பரவியது. இன்றுவரை தொடரும் சிரிய உள்நாட்டு யுத்தத்தின் தொடக்கப்புள்ளி அதுதான். ஆண்டாண்டுக் காலமாக சர்வாதிகார நசுக்கல்களுக்கு ஆட்பட்டிருந்த மக்கள் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க மேற்கொண்ட புரட்சியும் போராட்டங்களும் அரேபியர் வரலாற்றில் மிக முக்கியமானதோர் அங்கம். இந்தப் புத்தகம், ஆப்பிரிக்க - மத்தியக் கிழக்கு நாடுகளின் மக்கள் புரட்சியை அதன் வரலாற்றுப் பின்னணியுடன் படம்பிடிக்கிறது. |