Description |
தெனாலி ராமனின் ஒரு நகலாக நடைபோடுகிறார் பம்மலாரின் தீட்சிதர். சாதுரியமும் கிண்டலும் கேலியுமாய் கும்பகோணத்திலிருந்து சென்னை, டெல்லி வரை உலா வரும் குறும்புக்கார தீட்சிதர் மூலமாக அறுபதாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் சமூக நிகழ்வுகளை பகடி செய்யும் இக்கதைகள் சுவாரஸ்யமானவை. ஆமவடை ராயரும் வைகுண்ட வாத்தியாரும் லோகாம்பாள் பிசாசும் ஜட்கா வண்டி சாயபும் நேற்றைய மனிதர்களின் நிழல்களாய் இக்கதைகளில் பதிவாகியுள்ளனர். |