Description |
ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், கற்றறிந்த அறிஞர்கள் மத்தியில் தலைசிறந்த ஆன்மிக ஞானம் பெற்றவர் என போற்றப்படுகிறவர். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் பஞ்சாங்க கமிட்டி தலைவராக இருக்கிறார். சமஸ்கிருத மொழியில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், இப்போதும் ஏராளமான மாணவர்களுக்கு சமஸ்கிருத உயர்கல்வி போதித்து வருகிறார். இவரிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்கள் இன்று நாடெங்கும் பிரபலமான ஜோதிடர்களாக இருக்கிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்திலும் கரைகண்டவர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். இப்படி பல்துறை விற்பன்னராகத் திகழும் பெரியவரிடம், வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் வாங்கி வெளியிட்டால் அது மிக்க பயனுள்ளதாக அமையுமே என்று தோன்றியதன் விளைவே, சக்தி விகடனில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு இருக்கும் கேள்வி&பதில் பகுதி. வேதம், புராணம், தர்ம சாஸ்திரம், மன நலம், உடல் நலம், அன்றாட நடைமுறை, வழிபாட்டு முறைகள், ஆகம விதிகள், ஐதீகம், சடங்கு, சம்பிரதாயம், ஜோதிடம், கலாசாரம் போன்ற பல துறைகளிலும் வாசகர்கள் எழுப்பிய ஏராளமான கேள்விகளுக்கு விளக்கமாகவும் ஆணித்தரமாகவும், முழுக்க சந்தேகம் |