Description |
என் நினைகளுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடமாடுபவர்கள், 22 ஆண்களுக்கு முன் நான் சென்னைக்கு வரும்போது எங்கள் கிராமத்திலிருந்து எனக்குத் துணைக்கு வந்தவர்கள். துணைக்கு வந்தவர்கள்தான் அப்படியே எனக்குள் தங்கியும்விட்டார்கள். பாவம் என்னுடன் இத்தனை வருடங்களாகத் தங்கியிருக்கிறார்கள் ஒருவேளை எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இந்த சென்னைக்குள் அவர்கள் எங்கு போவார்கள், அதற்காகத்தான் அவர்களையும் அவர்களின் வாழ்வையும் ஒரு நாவலாக எழுதிவிட எண்ணினேன். |