Description |
பொதுவாக மனித மனம் சமூகத்தில், அரசியல் தளங்களில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக அறச்சீற்றம் கொள்கின்ற வேளைகளில் உடனடியாக எதிர்வினையாற்றத் துடிக்கும். அந்த மனம் நல்ல அரசியல் தலைவர்களுக்கு அல்லது ஆற்றல் மிகுந்த மனிதர்களுக்கு இருக்கும் பட்சத்தில் உடனடியாக களமிறங்கி உரத்த குரலில் முழங்கும்; படை திரட்டி போராட ஆரம்பிக்கும்; படுத்துக்கொண்டு இருப்பவர்களை அல்லது அப்படி பாவனை செய்து கொண்டிருப்பவர்களை அறிக்கைகள் மூலமாகவும், அனல் பறக்கும் பேச்சின் மூலமாகவும் உசுப்பிவிட்டு சரியான தீர்வை நோக்கி சமூகத்தை நகர்த்தும். |