Description |
உலக அரசியல்-பொருளாதார ஏகாதிபத்தியங்களின் தலைவனாய் செயல்படும் அமெரிக்காவின் எல்லைப்பகுதியில் நிலைபெற்று, அதன் அச்சுறுத்தல்களை துச்சமென தூக்கியெறிந்த சின்னஞ்சிறு கியூபாவின் வரலாற்றை மாற்றி எழுதியவர் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ. லத்தீன் அமெரிக்காவின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தவர். பல நூற்றாண்டுகால ஸ்பானிய, அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக, கொடுங்கோலன் பாடிஸ்டாவிற்கு எதிராக இளைஞர் படைத் தலைவராய் 1953இல் நீதிமன்றக் கூண்டில் நின்றபடி “வரலாறு என்னை விடுதலை செய்யும்!” என அவர் எழுப்பிய கலகக் குரல் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல; உலக மக்கள் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இந்த எழுச்சியுரை இப்போது தோழர் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கான ஓர் அஞ்சலியாய் வெளிவருகிறது. |