Description |
ஒன்பது கதைகள் அடங்கியுள்ள இத்தொகுப்பு குணசீலனின் முதல் இலக்கிய முயற்சியும் கூட. எழுத்து என்பது துணிச்சலான முயற்சி. அத்தகைய துணிச்சலில் ஈடுபட்டிருப்பதோடு உள்ளடக்கத்திலும் புதுமை காட்டியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பொதுவாக நவீன தமிழிலக்கிய உலகில், சொல்லப்படும் நிலப்பரப்புகளை விட சொல்லப்படாத நிலப்பரப்புகளே அதிகம். பெருஞ்சொல்லாடல்களாக அடையாளப்படுத்தப்படும் நிலப்பரப்புகளுக்கு இடையே இல்லாமலாக்கப்படும் குறுநிலப் பரப்புகள் அநேகம். அத்தகைய நிலப்பரப்பு ஒன்றின் கதைகளை, மனிதர்களை இத்தொகுப்பில் எழுதியிருக்கிறார் குணசீலன். |