Description |
ஜனநாயகம் என்றால், பெரும்பான்மையோரின் ஆட்சி என்பது பொருள். ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை அமைந்த எந்த ஆட்சிக்கும் 50 சதவீத வாக்குகளை விடவும் அதிக வாக்குகள் கிடைத்ததே இல்லை. இன்றைய பாரதிய ஜனதா ஆட்சி பெற்றது 31 சதவிகித வாக்குகள் மட்டுமே! பணபலம், ஆள்பலம், சாதி – மதரீதியான அம்சங்களே இன்றைய தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஊடகங்களின் மூலம், கார்ப்பரேட்டுகளே தேர்தல்களின் முடிவுகளைத் தீர்மானிக்கிறார்கள். இந்தச் சீரழிவுகளுக்கு மாற்று – பகுதி பிரதிநிதித்துவ ஆட்சி முறை என்கிற மாற்று வழியை முன் வைக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. ஏன்?. |