அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எனக்கு முன் திசை துலக்கமாக இருந்தது. கலைக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவின் வழி மெய்மையைக் கண்டடைய முயற்சித்த தலைமுறையினருள் ஒருவன் தான் நான் என்கிற தெளிவு எனக்கு இருந்தது.