Description |
இமயமலையும் கங்கையும் இந்தியாவுடன் எவ்வளவு பிரிக்க முடியாத அம்சங்களோ அதைப் போலவே காந்தியமும் இந்தியாவும் என்று மோகித்சென் ஒருமுறை குறிப்பிட்டார். தன்னலமறுப்பு, தியாகம், அர்பணிப்பு, இந்திய விடுதலைக்குப் பிறகும் ஒரு துறவி போல் வாழ்ந்தமை இவை காந்தி அடிகளை இமயத்திற்கும் உயரமாகத் தூக்கி நிறுத்தின. |