Description |
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் புறக்கணித்திருக்கிறது. மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் மதப்பாகு பாட்டைச் சங்கப்பரிவாரத்தினர் திணிக்க முயல்கிறார்கள். ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் முதலான நாடுகளிலிருந்து வந்து குடியேறும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள் புத்த மதத்தினர் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் முஸ்லிம்களுக்கு குடியுரிமை இல்லை என்பதும் தான் புதிய சட்டத்திருத்தத்தின் சாரம். |