Description |
ஆளும் அரசுக்கு எந்த ஒரு அமைப்பு அல்லது குழுவைப் பிடிக்கவில்லையோ அவர்கள் இதன் கீழ் பழிவாங்கப் படலாம். பசுவின் பெயரால் நடக்கும் கொலைகள். பழங்குடி அல்லது தலித்துகள் மீதான தாக்குதல்கள் என யார் அவற்றை எதிர்த்து நின்றாலும் அவர்களை அரசு இச்சட்டத்தின் மூலம் “இவர் எந்நேரமும் வெடிக்கக்கூடிய வகையில் புகைந்து கொண்டிருக்கும் ஒரு வெடிகுண்டு” எனச் சொல்லி ஆண்டுக் கணக்கில் ஒருவரை உள்ளே தள்ளி விடலாம். |