Description |
வங்க மொழிச் சிறுகதைகள்-மூன்றாம் தொகுதி இந்த மூன்றாம் தொகுதியில்1920ல் இருந்து1940வரை பிறந்த26தலைசிறந்த வங்க மொழிக் கதாசிரியர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.சற்றேழத்தார இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு எழுதப்பட்ட இக்கதைகள் புதிய யுகத்தன் புதிய தேசத்தின் கதையை புதிய பாணியில் புது மொழியில் சொல்பவையாக அமைந்துள்ளன.புதிய தன்னுனர்ச்சியுடனும் விழிப்புணர்வோடும் எழுதப்பட்ட இந்த படைப்புக் காலம் வங்க மொழியின் இரண்டாம் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.அஷ்ருகுமார் சிக்தார் இந்நூலின் தொகுப்பாசிரியாரன இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வங்க எழுத்தாளர்களில் ஒருவர்.சிந்தனையாளர் மற்றும் சமூக நெறி மற்றும் மனித நேய ஆர்வலர். 30க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் புரோனோ பதேர ரேகா ஆதுனிக கபிதார திக்பாலய,பாக்யேரஸ்ருஷ்டி மற்றும் இவர் எழுதிய ரபிந்திரநாத் தாகூர் குறித்த நூல்கள் வங்க இலக்கியத்திற்கு சிக்தாரின் முக்கிய பங்களிப்புகளாகக் கருத்ப்படுகின்றன.பெ.பானுமதி இந்நூலின் மொழிபெயர்ப்பாளர்.கொல்கத்தா பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியை.இவர் பல்வேறு முக்கிய வங்கப் படைப்புகளைத் தமிழிற்கு மொழிபெயர்த்துள்ளார்.மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி விருது மற்றும் திசை எட்டும் விருதுகளைப் பெற்றவர். |