Description |
மூங்கில் புதரில் தனது கூட்டத்துடன் மேய்ந்த ஆண்யானை, நீர்நிலைக்கருகே தன்னைத் தாக்க வந்த புலியொன்றைக் கொன்று தனது தந்தத்தின் நுனியிலிருந்து வழிந்த குருதியை, கொட்டிய மழை நீரில் கழுவி விட்டு பின்னர் மலைச்சரிவில் மெல்ல தன் கூட்டத்தை நோக்கி நடந்தது. அதன் கன்னத்தில் வழிந்தோடிய தேநீரின் மீது வண்டுகள் ரீங்காரமிட்டு மொய்க்க தனது பகைவனைக் கொன்ற பெருமையோடு தனது இணையுடன் புணர்ந்து, பின்னர் வாழைத் தோட்டத்தில் உறங்கப் போனது. |